பேரறிவாளன் திருமணத்திற்கு தடல்புடல் ஏற்பாடு - அற்புதம்மாள் சொன்ன ஹேப்பி நியூஸ்! திரைப்பட ஷூட்டிங்காக சேலத்தில் தங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, இயக்குனர் மாரி செல்வராஜையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் பேசியதாவது:- "பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அதன்படி தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்து வருகிறோம். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் சேலம் வந்து தற்போது அவரை நேரில் சந்தித்து எங்களது நன்றியை தெரிவித்தோம். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜிக்கும் நன்றி தெரிவித்தோம். என்றார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; வேகமாக நிரம்பும் Mettur Dam; விவசாயிகள் மகிழ்ச்சி! தொடர்ந்து பேசிய அற்ப