தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி.,க்கள் உட்பட, 20 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூனில் முடிவுக்கு வருகிறது. ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 20 பேரின் பதவிக்காலம் முன்கூட்டியே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூலையில் நடக்க உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். இந்நிலையில், ராஜ்யசபாவில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன்,... விரிவாக படிக்க >>