“தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள்” பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியல் நடிகை …!


“தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள்” பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியல் நடிகை …!


விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகி, ஜீ தமிழில் புதிய சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு வகையில் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.
தனுஷ் படத்தை திரையிட மறுத்தாங்க: கஸ்தூரி ராஜா கூறிய பகீர் தகவல்..!

இந்த சீரியலில் டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடிக்கிறார். அவரது அம்மா செளந்தர்யாவாக ரூபா ஸ்ரீ நடித்து வருகிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். சமீபத்தில் ரோஷினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாலும் சீரியலை விட்டு விலகினார்.

அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். அச்சு அசலாக கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு வினுஷா பொருத்திவிட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.இந்த தொடரில் அடுத்ததாக கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரன் விலகினார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி,பாரதியின் தம்பி அகிலை திருமணம் செய்து கொண்டார். கண்ணம்மாவை பழிவாங்குவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தார். இதனையடுத்து அஞ்சலி கர்ப்பமானதை அடுத்து அவர் அக்கா கண்ணாமவிற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். அக்கா - தங்கை பாசத்துடன் சீரியல் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கண்மணி திடீரென சீரியலை விட்டு விலகினார்.

விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறிய கண்மணி, தற்போது அமுதா என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

கல்விக்காக ஏங்கும் பெண் ஒருவர் தனது கனவை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இந்த கருவை மையமாக கொண்டு எடுக்கப்படும் அமுதா என்ற பெண் பற்றிய கதையில் தான் கதாநாயகியாக கண்மணி நடித்து வருகிறார்.சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்சரிக்கை சோசியல் மீடியாவில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

“தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள்” என பதிவிட்டுள்ளார். இது கண்மணி ரசிகர்களிடையே சோகத்தை உருவாக்கியிருக்கிறது. என்ன ஆச்சு கண்மணி, ஏதாவது பிரச்சனையா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். புதிதாக இணைந்த சீரியலில் ஏதாவது பிரச்சனையா? இல்லை சீரியல் புரோமோஷனுக்காக இதனை பதிவிட்டுள்ளாரா? என ரசிகர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog